News March 24, 2025
இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 6, 2025
திருச்சி: தொழில் நிறுவனத்தில் தீ விபத்து

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள ஜமீல் என்ற இரும்பு உருக்கு ஆலை தனது கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரவு அங்கு பணியில் பயன்படுத்திக்கொண்டிருந்த சிசர் லிப்டிங் என்னும் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
News November 6, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
திருச்சி: இந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட தடை!

வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 8-ந்தேதி வரையும் மற்றும் மெட்ராஸ் என்ஜினீயரிங் குரூப் பயிற்சியாளர்களால் 10- 22ம் தேதி வரையிலும், காலை 7.30 – மாலை 5.30 மணி வரையும், இரவு 7 மணி – இரவு 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது. எனவே பயிற்சி தளத்தில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


