News January 19, 2026
இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.
Similar News
News January 19, 2026
பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?

பீர் குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேற வாய்ப்புள்ளது என்றாலும் அது சரியான முறை அல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிப்பதால் அதிக சிறுநீர் வெளியேறும்போது அதனுடன் சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய (<5 mm) கற்களும் வெளியேறும். ஆனால், பெரிய கற்கள் வெளியேறாது. அதேநேரம், பீர் அதிகம் குடிப்பது புதிய கற்களை உருவாகவும், முன்னரே கற்கள் இருந்தால், வலி அதிகரிக்கவும் காரணமாகும் என்று எச்சரிக்கின்றனர்.
News January 19, 2026
BREAKING: டெல்லியில் விஜய்.. CBI குறுக்கு விசாரணை!

CBI வளையத்தில் சிக்கியுள்ள விஜய், சற்றுமுன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜராகியுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கில் கடந்த 12-ம் தேதி விஜய் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக இன்று குறுக்கு விசாரணையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தவெக நிர்வாகிகள் அளித்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது விஜய்க்கு பெரும் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
News January 19, 2026
வாக்காளர் பட்டியல்: ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு

TN-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது. SIR பணிகளில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீடு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.


