News April 19, 2024

இயந்திர பழுது காரணமாக காத்திருந்த மக்கள்

image

திருச்சி கிராப்பட்டி தனியார் பள்ளியில் வாக்கு சாவடி எண் 212ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது வாக்கினை செலுத்தினர். அருகில் உள்ள 214, 215வது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

Similar News

News July 7, 2025

திருச்சி: காய்கறி விதைகளுக்கு 75 % மானியம்

image

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, 75 % மானியத்தில், ரூ.7,500 மதிப்புள்ள காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருச்சி: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ஆம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

News July 7, 2025

திருச்சி: தபால் நிலையத்தில் மொபைல் சார்ஜிங் வசதி அறிமுகம்

image

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை தபால் நிலையத்தில் “மொபைல் சார்ஜிங் நிலையம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த மொபைல் சார்ஜிங் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!