News November 22, 2025
இப்படியும் சில பிள்ளைகள்.. பெற்றோர் ஜாக்கிரதை!

ஆரணி அருகே அம்மாவின் நகைகளைத் திருடி தனது பெண் தோழிகளுக்கு செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஊர் சுற்றிவந்த +2 மாணவனின் செயலால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிலிருந்து 2.5 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது இது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பெற்றோர் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 24, 2025
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஹைப்தம் டப்டாபை கொல்லப்பட்டுள்ளார். 12 வயதில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஹைப்தம், 2015-ல் அமைப்பின் முக்கிய நபராக கவனிக்கப்பட்டார். 2016-ல் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
News November 24, 2025
ஆஷஸ் தொடரில் ஆஸி.,க்கு ₹17 கோடி நஷ்டம்?

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., வெற்றி பெற்றது. அதேநேரம், இப்போட்டி 2 நாள்களிலேயே முடிவுற்றதால், 3, 4-ம் நாள்களுக்கான டிக்கெட் விற்பனை இல்லாமல் போனது. இதனால் ஆஸி., கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ₹17.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போதும் ₹65 கோடி இழப்பை ஆஸி., சந்தித்துள்ளது.
News November 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.


