News March 20, 2024
இன்று வேட்பு மனுதாக்கல்: அதிகாரிகள் தயார்

மதுரை: மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச்.20) துவங்குவதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா உள்ளார். மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். இதற்கான தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Similar News
News February 4, 2026
மதுரை; மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவு 47 கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா 40 இந்நிலையில் அறிவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்துள்ளார். மது பழக்கத்தை கணவர் நிறுத்தாததால் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார், இதனால் மனமுடைந்த அறிவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 4, 2026
மனைவி கண் முன்னே வேன் மோதி கணவன் பலி

மதுரை கல்லணையை சேர்ந்தவர் பூமிநாதன்(67) மனைவி சங்கீதாவுடன் பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். கோட்டைமேடு ராமசாமி பாலம்
அருகே சென்ற போது
வாடிப்பட்டி தனிச்சியத்தை சேர்ந்த மாரிமுத்து(43)
ஓட்டிச் சென்ற வேன் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தவறி கீழே விழுந்ததில் கணவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
அலங்காநல்லூர்
போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
News February 4, 2026
மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.


