News November 26, 2025
இன்று மதியம் புயல் உருவாகிறது

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) மதியம் புயலாக தீவிரமடையும் என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தென் & வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News March 30, 2026
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (மார்ச் 29) இரவு 10 மணி முதல் (மார் 30) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 30, 2026
புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.
News March 30, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல் இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


