News October 19, 2025
இன்று இரவு மாநகரில் காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 19, 2025
நெல்லை: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
நெல்லை: குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா உத்தரவின்படி இன்று திருநெல்வேலி மண்டலம் வார்டு 15 பர்வத சிங்க ராஜா தெரு பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடும் குடிநீரில் மாநகராட்சி பணியாளர்களால் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர் மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மாநகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
News October 19, 2025
நெல்லை: தீபாவளி – மின்வாரியம் முக்கிய அறிவிப்பு

நெல்லை மாவட்டம் மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடபட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது. இதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.