News September 5, 2024
இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று மற்றும் நாளை (செப்.5, 6) காலை 10 மணி முதல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பெண்கள் தேவைப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 19 முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம்: காவல்துறையில் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.25-ம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இது போன்ற முக்கிய அறிவிப்புகளை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.