News October 26, 2024

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

image

மதுரையில் இருந்து இன்று (அக்.26) இரவு 11.35க்கு புறப்படவுள்ள (02121) ஜபல்பூர் சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் – பெரம்பூர் – கொருக்குப்பேட்டை தடத்தில் செல்லும். இந்த ரயில் நாளை (அக்.27) தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்காது. மதுரையில் இருந்து (அக்.27), 00.55க்கு கிளம்பும் சம்பர்க் கிரந்தி துரித ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் வழியாக செல்லும்.

Similar News

News January 27, 2026

செங்கை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News January 27, 2026

மாமல்லாபுரம்: நகராத 17 ஆண்டு கால திட்டம்

image

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தை செங்கல்பட்டுடன் இணைக்கும் ரயில் பாதை திட்டம், 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள், இத்திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்துகின்றனர். கடந்த 2011-ல் கற்கள் நடப்பட்டும், நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வால் பணி முடங்கியுள்ளது.

News January 27, 2026

செங்கை: கிராம ஊராட்சி செயலாளர் பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் மின் மோட்டார் இயக்க சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், மேல்மருவத்தூர் போலீசார் இதனை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!