News October 26, 2024

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

image

மதுரையில் இருந்து இன்று (அக்.26) இரவு 11.35க்கு புறப்படவுள்ள (02121) ஜபல்பூர் சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் – பெரம்பூர் – கொருக்குப்பேட்டை தடத்தில் செல்லும். இந்த ரயில் நாளை (அக்.27) தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்காது. மதுரையில் இருந்து (அக்.27), 00.55க்கு கிளம்பும் சம்பர்க் கிரந்தி துரித ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் வழியாக செல்லும்.

Similar News

News August 11, 2025

ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

image

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

News August 11, 2025

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

News August 10, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 10) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!