News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 1, 2026
படுத்த படுக்கையாக பாரதிராஜா.. கண்ணீர் PHOTO

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா, சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் ஹாஸ்பிடல் படுக்கையில் இருக்கும் போட்டோஸ் வெளியாகி ரசிகர்களை கண்கலங்கச் செய்துள்ளது. ‘மீண்டு வாருங்கள் சார்’ என நெட்டிசன்கள் SM-களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.
News April 1, 2026
வீட்டுக்கு 1 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் தருவேன்: சீமான்

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன் என பிரசார கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். ’நான் சொல்வதை கேட்பதற்கு இனிக்கிறதா, இதுதான் காதில் தேன் ஊற்றுவது’ என கிண்டலாக பேசிய அவர், இதெல்லாம் எப்படி தர முடியும் என்று என்னிடம் கேட்க முடியாது என பேசியுள்ளார். மற்றவர்கள் எப்படி ₹2,000 ₹3,000 கொடுப்பார்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன் என்றார். <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
இனி பிரசாரத்திற்கு நேரில் வரமாட்டாரா விஜய்?

கொளத்தூரில் ஸ்தம்பித்த கூட்டத்தால் விஜய் பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தினார். இதுவே தமிழகம் முழுவதும் நிகழும் என கணிக்கும் விஜய், இனி வீடியோ மூலம் பிரசாரம் செய்யவுள்ளாராம். ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதி பிரச்னைகளைக் கொண்டு வாக்கு சேகரிக்கும் வடிவில் விஜய் பேசிய வீடியோக்களும் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இனி முக்கிய தொகுதிகளுக்கு மட்டும் விஜய் நேரில் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.


