News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
பாஜகவின் வக்கிரமான அரசியல்: நாஞ்சில் சம்பத்

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அதை விஜய் எதிர்கொள்வார் எனக் கூறிய அவர், தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை தவெகவிற்கு சாதகமாக இருப்பதாகவும், அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு அவசர ஆலோசனை

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். TN-ல் கையிருப்பில் உள்ள வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகரீதியான கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு என ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
தமிழக தேர்தல் தேதி… புதிய தகவல் வந்தது

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை நேற்று ECI ஆய்வு செய்து முடித்துள்ளது. இதனால், மார்ச் 15-ம் தேதி தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை, மதுரை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


