News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 4, 2026
ராசி பலன்கள் (04.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 4, 2026
எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க முன்வந்த ரஷ்யா

இந்தியாவின் எரிசக்தி நெருக்கடியை தீர்க்க ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது. ரஷ்ய துணைப் பிரதமர் மந்த்ரோவ், தனது இந்திய பயணத்தின் போது PM மோடி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து ஆலோசித்தார். கச்சா எண்ணெய் மற்றும் LNG விநியோகத்தை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான திறன் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
News April 4, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹5,000.. வந்தது HAPPY NEWS

கெளரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ₹25,000-லிருந்து ₹30,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதியை கல்லூரி கல்வி இயக்ககம் விடுவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் முதல் கெளரவ விரிவுரையாளர்களின் வங்கிக் கணக்கில் உயர்த்தப்பட்ட சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் மாதம்தான் ₹30,000 வரவு வைக்கப்படும் என தகவல் பரவிய நிலையில், இந்த திருப்பம் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


