News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 27, 2026

பயந்து சாகிறார் விஜய்: கீதாஜீவன்

image

கட்சி தொடங்கி 1 வருடமே ஆனவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த CM என பேசுவதாக கீதாஜீவன் கூறியுள்ளார். பாஜக என சொல்லக்கூட விஜய் பயந்து சாவதாக கூறிய அவர், ஜனநாயகன் படத்துக்காக கூட குரல் கொடுக்காதவர் நாட்டின் ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவார் என கேட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறும் விஜய் தன் மனைவி, பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

லாக் டவுன் கிடையாது.. மத்திய அரசு புதிய அப்டேட்

image

கேஸ், எரிபொருள் தட்டுப்பாடால் மத்திய அரசு லாக் டவுன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லாக் டவுன் என்பது வதந்தியே என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற பொய்யான தகவல் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கும் முயற்சிகள் ஒரு பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கண்டித்துள்ளார்.

News March 27, 2026

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

image

US டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹94 ஆக சரிந்துள்ளது. மேற்காசிய பகுதிகளில் நிலவும் போர் பதற்றம், அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு ஆகியவை இந்தச் சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியேற்றி வருகின்றனர்.

error: Content is protected !!