News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
புதுவை: வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தவர் மீது வழக்கு

புதுவை, வில்லியனூர் தொகுதியில் பறக்கும் படை அதிகாரி ஜான்ஜோசப் தலைமையில் தேர்தல்துறையினர் நேற்று அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் உதயக்குமார் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 10, 2026
கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கனிமொழி ஏன் மவுனம் காக்கிறார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News April 10, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. காலையிலேயே HAPPY NEWS

தமிழக தேர்தலை முன்னிட்டு, காங்., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக PM Kisan திட்டத்தின் கீழ், விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நிலமுள்ள விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


