News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
BREAKING: பதவியை பறித்தார் ஸ்டாலின்

கோவை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து, ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே, அதிமுகவினருடன் மகாலிங்கம் தொடர்பில் இருந்துள்ளார். இன்று நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின்போது, இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உடனே அவரின் கட்சிப் பதவியை, ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும், பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.
News November 19, 2025
‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை வெடித்தது

‘வாரணாசி’ டைட்டில் உரிமம் ராம பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. ‘Vaaranasi’ என அந்த தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில், ராஜமௌலி ‘Varanasi’ என தனது படத்திற்கு பெயரிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமௌலியும், படத்தின் தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
News November 19, 2025
மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.


