News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.
Similar News
News March 27, 2026
ஸ்தம்பித்த ஈரோடு!

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அருகே நேற்று இரவு லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. பின்னர், லாரியின் பழுது நீக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது. இந்த திடீர் பாதிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News March 27, 2026
ஏப்ரல் 2-ல் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்

தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ம் தேதி துவங்க உள்ளார். திருவாரூரில் தொடங்கும் தனது பிரசாரத்தை ஏப்ரல் 21-ம் தேதி மாலை கொளத்தூரில் முடிக்கிறார். இதற்கிடையே ஏப்ரல் 6-ம் தேதி கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். EPS, சீமான் உள்ளிட்டோர் தங்களது பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். TN-ல் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. <<-se>>#TNELECTION2026<<>>
News March 27, 2026
வெள்ளியன்று இத பண்ணுங்க: பணக் கஷ்டம் நீங்கும்

மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, சுக்கிர ஓரை (இரவு 8- 9) நேரத்தில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரில் தீபம் ஏற்றும் திரியை திரித்து விடவும். பிறகு அகல் தீபத்தில் நெய் ஊற்றி, அதில் இந்த வெட்டிவேர் திரியை இடவும். மகாலட்சுமி படத்தின் முன், இந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வேண்டுவதால், பணக் கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். 3 வாரம் சுக்கிர ஓரையில் இவ்வாறு வழிபட வேண்டும். SHARE IT.


