News December 14, 2025
இனி வந்தே பாரத் ரயில்களில் நம்ம ஊர் உணவு

வந்தே பாரத் ரயில்களில் டீ & உணவு வழங்கப்படுகிறது. இவை ஒரு குறிப்பிட்ட மெனு பட்டியலின்படி இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்தந்த வட்டார உணவுகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உதாரணமாக, தென்பகுதிகளை நோக்கி செல்லும் ரயில்களில், முக்கிய தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுமாம். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நம்ம ஊர் ஸ்பெஷலாக எந்த உணவு வழங்கலாம்?
Similar News
News March 2, 2026
காங். இன்றி திமுகவுக்கு கஷ்டம்: நிர்மல் குமார்

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மற்றொரு புறம் <<19279246>>ராகுல் காந்தி<<>> தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது என தவெக நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News March 2, 2026
சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News March 2, 2026
தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


