News October 14, 2025

இனிப்பு விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்பு மற்றும் காரம் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும், நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

தஞ்சாவூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<> க்ளிக்<<>> செய்யவும். இதனை SHARE பண்ணுங்க!

News October 14, 2025

தஞ்சை: 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்

image

பெருமகளூர் அரசினர் மேல்நிலை பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!