News March 30, 2026

இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட்டே வேண்டாம்!

image

பக்ரா-நங்கல்(பஞ்சாப் – இமாச்சல பிரதேசம்) ரயிலில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியும். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியதாம். அன்று இலவசமாக இயக்க தொடங்கப்பட்டு, இன்றும் அதே தொடர்கிறது. சட்லஜ் நதியை கடந்து சிவாலிக் மலைகளில் ஏறி இறங்கி 13 கி.மீ தூரம் இயற்கையை வருடி செல்லும் இந்த ரயிலானது 6 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

Similar News

News April 6, 2026

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு

image

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் 5 நாள்கள் விடுமுறையாகும்.

News April 6, 2026

கூட்டணி கட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்ததா அதிமுக?

image

பாமகவுக்கு அதிக பலம் உள்ள தொகுதிகளைதான் அதிமுக ஒதுக்கியுள்ளதாக கே.பாலு கூறினார். வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக எழும் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற எந்தவொரு கட்சியாவது இதுபோன்று கூறியிருக்கிறதா என கேட்டார். மேலும், திமுகவில் தான் அப்படி நடந்துள்ளதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வருத்தப்படுவதாகவும் அவர் பேசினார்.

News April 6, 2026

சிவனின் எந்த மந்திரம் எப்போது கூறினால் முழு பலன்!

image

ஒரு மந்திரத்தை குறிப்பிட்ட நாள், நேரம், திதி, முறையில் சொல்லும் போது பலன் அதிகமாக கிடைக்கும் ✱‘ஓம் நம சிவாய’ பஞ்சாட்சர மந்திரத்தை பிரம்ம முகூர்த்தம்(காலை 4- 6 மணி வரை) உச்சரிப்பது நல்லது ✱மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் 11 முறை உச்சரிப்பது சக்தி வாய்ந்ததாகும் ✱ருத்ராஷ்டகம், சிவ தாண்டவம் மந்திரத்தை சிவராத்திரியன்று எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். வேண்டுதல்கள் நிறைவேறும்.

error: Content is protected !!