News November 25, 2025
இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
Similar News
News March 9, 2026
எதற்கும் அஞ்சாத அணி: கம்பீர்

எதற்கும் அஞ்சாத அணியை உருவாக்கி உள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பின் பேசிய அவர், மற்றவர்கள் உருவாக்கியதை அப்படியே பெற்றுக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. புதிதாக ஒன்றை உருவாக்குவதையே நான் நம்புகிறேன். பயமற்ற அணுகுமுறை தோல்வியின் அழுத்தத்தை குறைத்து, அதிரடியாக ரன் குவிக்கும், எதிரணிகளை ஆட்டமிழக்க செய்யும் ஆக்ரோஷமான பாணியை உருவாக்கும் என்றார்.
News March 9, 2026
மார்ச் 11-ல் பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. *பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கக் கூடாது. SHARE IT
News March 9, 2026
தேர்தல் பணி: விசாரணைக்கு விலக்கு கேட்ட விஜய்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நாளை டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நாளை தவெக வேட்பாளர்களின் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வேண்டி விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


