News December 14, 2024

இந்த ஆண்டு 40 கோடி ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் எஸ் பி

image

புதுச்சேரி இணைய வழி எஸ்.பி. பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த வருட மட்டும் ரூ.40 கோடி அளவிற்கு இணைய வழி மோசடியில் புதுச்சேரி சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையவழியில் வரும் வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருளை கொடுக்கிறோம். ஆன்லைன் டிரேடிங்கில் அதிகமாக சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்பு போன்ற எதையும் நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றார்.

Similar News

News September 12, 2025

டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 12, 2025

புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

அடாக் அடிப்படையில் 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரியை சேர்ந்த 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு என்ட்ரி கிரேடில் அடாக் அடிப்படையில் பதவி அளித்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிசி எஸ் அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராகவும், முரளிதரன் சுற்றுலா துறை இயக்குநராகவும், மோகன்குமார் மாகே மண்டல நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி சார்பு செயலர் ஜெய் சங்கர் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!