News October 5, 2024

இந்து முன்னணி மாநில தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

image

பேட்டையில் கடந்த 2 ஆம் தேதி, இந்து முன்னணியினர் இந்துக்களின் உரிமையை மீட்க வேண்டும் எனக்கூறி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்துக்களின் நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாக கோஷமிட்டனர். இது தொடர்பாக போலீசார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட 6 பேர் மீது நேற்று(அக்.,4) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 28, 2025

நெல்லையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

நெல்லையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 (15+29) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக.29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே<> கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!