News November 17, 2024
இந்து முன்னணியினர் 230 பேர் மீது வழக்கு!

குமரி பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயிலில் நவ.,13 அன்று மர்ம நபர்கள் கோயில் சிலைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் 4 தனிப்படை மூலமாக தேடுதல் நடத்தி வரும் நிலையில், கொள்ளையை கண்டித்து இந்து முன்னணியினர் 15-ம் தேதி கோயில் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 230 பேர் மீது போலீசார் நேற்று(நவ.,16) வழக்குப் பதிந்துள்ளனர்.
Similar News
News March 1, 2026
குமரி: வட்டார காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு

குமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றுப்பாலம் முதல் திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகளும், கொடிகளும் வைத்திருந்ததாக மேற்கு மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி(50) மீது களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அவை வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News March 1, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகர்கோவில் அருகே கார் மோதி பெண் பலி

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


