News September 27, 2025
இந்திரா நகர் பகுதியில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் SAFE RAMNAD பாதுகாப்பான சமூகக் கூட்டமைப்பு முயற்சியின் கீழ், துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் (26.09.2025) அன்று பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பையும் குற்றச்செயல்களை தடுக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 6, 2026
ராமநாதபுரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ராமநாதபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News January 6, 2026
ராமநாதபுரத்தில் நாதக நிர்வாகிகள் கைது

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என பெயர் இல்லாமல் இருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை இராமேஸ்வரம் காவல் துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
News January 6, 2026
ராம்நாடு: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

ராம்நாடு மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


