News January 30, 2025
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 744-ல் 71.6 கி.மீ முதல் 139.9 கி.மீ வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகள் செய்ய வேண்டாம் என்று நெடுஞ்சாலைத்துறை செய்து குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் சிவகிரி வட்டத்தில் தொடங்கி ராயகிரி ,கடையநல்லூர் காசி தர்மம், செங்கோட்டை வரை கையகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 29, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News September 29, 2025
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அறிவிப்பு

சரஸ்வதி பூஜை, விஜயதசமி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல் விருதுநகர் சிவகாசி, தென்காசி வழியாக செல்லும் இது ஒரு சேவை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 29, 2025
தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.