News February 21, 2025
இந்திய துணைக் குடியரசுத் தலைவருக்கு எம்பி பதில் கடிதம்

இந்திய துணை குடியரசுத் தலைவர் அனைத்து உலக தாய்மொழி நாளையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு நேற்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழில் கடிதம் எழுதியதற்கு நன்றி எனவும், பாராளுமன்றத்தின் முக்கிய ஆவணங்களை எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
Similar News
News September 24, 2025
விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 24, 2025
முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழா

2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் விழுப்புரம் அடுத்த காக்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர், வீராங்கனைகள் விழாவில் கலந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப். 26 காலை 11 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெறுகிறார். இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.