News September 15, 2024
இந்திய – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்துக

அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பசலியான் இன்று (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்கள் கைது விசைப்படகு பறிமுதல் என இலங்கை தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியா இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கூறியுள்ளார். இது போன்ற பேச்சுவார்த்தை 2010ல் துவங்கியது என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 11, 2025
அஞ்சல் ஊழியர் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் – அதிகாரி தகவல்

குமரி கோட்டத்தில் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இன்று கூறினார்.
News November 11, 2025
குமரியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி இரவு ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐபி இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் இன்று இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
News November 10, 2025
குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பம் விபரம்

குமரி சட்டமன்ற தொகுதியில் 2,81,793, நாகர்கோவில் தொகுதியில் 2,07,186, குளச்சல் தொகுதியில் 2.49,733, பத்மநாபபுரம் தொகுதியில் 2,27,417, விளவங்கோடு தொகுதியில் 2,343,43, கிள்ளியூர் தொகுதியில் 2,43,346 என மொத்தம் 14,43,818 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 90.64 சதவீதம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.


