News May 3, 2024
இந்திய அணி போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த முடிவு

சாம்பியன் டிராஃபி போட்டிகளில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு அருகில் லாகூர் இருப்பதால் அந்த மைதானம் பரிசீலக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், அந்நாடு இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது. இந்த தொடர் அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
Similar News
News September 21, 2025
பெட்ரூம் அமைதியா இருக்க.. இந்த 4 பொருள்களை நீக்குங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, படுக்கையறையில், இந்த 4 பொருள்கள் இருக்கக்கூடாது *தெய்வப் படங்கள்: இது எதிர்மறையாக ஆற்றலை பெருக்கும் *விலங்குகளின் படங்கள்: தம்பதியரின் உறவில் மோதல்களை ஏற்படுத்தி, அமைதியை குலைக்கும் *காலணிகள்: தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடியிலும் காலணிகள் இருக்கக்கூடாது. இது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் *துடைப்பம்: இது நிதி நிலையை மோசமாக்கி, துரதிஷ்டத்தை தரக்கூடியது.
News September 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நாளை புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 21, 2025
இந்தியா பவுலிங்.. பும்ரா, வருண் உள்ளே

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா, வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Head to Head = 14, வெற்றி = 11 இந்தியா, 3 பாகிஸ்தான்.