News March 20, 2025

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்ச்.21) <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். வயது 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 21, 2025

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

News March 20, 2025

ரசாயன ஊசி செலுத்தப்பட்ட 6 டன் தர்பூசணி பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

பற்றியெரிந்த வீடு, மூதாட்டி பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டகுறுக்கி கிராமத்தில் நேற்று, திருப்பதிநாயுடு மனைவி நாகம்மாள்(75) என்பவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றியது. அதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். VAO முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!