News November 18, 2025

இந்தியா வரும் புடின்.. மத்திய அரசின் திட்டம் என்ன?

image

இந்தியாவில் நடைபெறும் 23-வது உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. வரும் டிச., 4,5-ம் தேதிகளில் புடின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 18, 2025

மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

image

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

News November 18, 2025

மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

image

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

News November 18, 2025

SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

image

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!