News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 600 ▶குறள்:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
▶பொருள்: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
News February 3, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மின்னலே’

*காதலர் தினத்தையொட்டி மாதவனின் ‘மின்னலே’ படம் பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’ பிப்.20 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *’துரந்தர் 2′ அப்டேட் இன்று 12:12 மணிக்கு வெளியாகிறது *ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள ‘பீகி பீகி’ ஆல்பம் யூடியூப்பில் வெளியானது
News February 3, 2026
பிரிவினைவாத மனநிலையில் ஸ்டாலின் பேச்சு: FM

ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடப்பதாக CM ஸ்டாலின் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு முழுக்க முழுக்க பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணம் எனக்கூறிய அவர், பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியது வருந்தத்தக்க விமர்சனம் என்றார். அதிவேக ரயில்கள், சிறப்பு வேளாண் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு பயனளிக்காதா எனவும் கேள்வி எழுப்பினார்.


