News January 13, 2026

இந்தியாவுக்கு நம்பிக்கையளித்த சென்னை!

image

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்படுகிறது. இதன் மூலம் 95 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கழிவு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது’ என சென்னை மாநகராட்சியை பாராட்டியுள்ளார்.

Similar News

News February 8, 2026

சென்னையில் குடிநீர் வராது!

image

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை (பிப்.09) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் திருவெற்றியூர் குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் மாதவரம் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

News February 8, 2026

சென்னை மெட்ரோவில் வேலை- APPLY HERE!

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) உள்ள பல்வேறு நிலை மேனேஜர் பதவிக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தலைமை ஜென்ரல் மேனேஜர், இணை ஜென்ரல்பதவிகளில் 19 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ₹2,70,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு இப்பணியிடங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்து பிப்.23க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

சென்னை: ஜூஸில் கிடந்த பூரான்!

image

காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவர் ராமாபுரத்தில் உள்ள டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குதித்துள்ளார். அந்த ஜூஸில், உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் உரிய பதில் அளிக்காததால், அவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!