News November 5, 2025
இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா!

டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, காற்று தர குறியீடு (AQI) 293-ஆக உள்ளது. இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேபோன்றதொரு சூழலை தாங்களும் சந்தித்ததாகவும், அதில் இருந்து மீண்ட அனுபவங்களை பகிர தயாராக இருப்பதாக கூறி, அது தொடர்பான சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
பழிவாங்குகிறதா பாம்பு? ஒரு மாதத்தில் 7 முறை கடி

தெலங்கானாவில் 28 வயதான இளைஞரை, ஒரு மாதத்தில் 7 முறை பாம்பு கடித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறை கடித்ததும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்த அந்நபர் வீட்டுக்கு திரும்பியதும், மீண்டும் மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதில் பீதியடைந்த அந்நபர், பாம்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணி புலம்பி வருகிறார். உண்மையில் சில வகை பாம்புகள் பழிவாங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News November 6, 2025
PM மோடியுடன் உலக சாம்பியன்கள் PHOTOS

ODI உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் அணி, இன்று PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. PM மோடியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்திய வீராங்கனைகள், ‘Namo’ என்ற பெயர் பொறித்த இந்திய ஜெர்சியையும் வழங்கினர். மேலே Swipe செய்து அந்த புகைப்படங்களை பாருங்கள்.
News November 6, 2025
இரவில் கட்சி தாவினார்.. பிஹாரில் எதிர்பாராத திருப்பம்

பிஹாரில் நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முங்கெர் தொகுதியின் ஜன் சுராஜ் வேட்பாளர் சஞ்சய் சிங், பாஜகவுக்கு தாவியுள்ளார். நேற்று மாலை 5 மணி வரை பாஜகவுக்கு எதிராக வீடு வீடாக ஓட்டு கேட்டவர், திடீரென கட்சி மாறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே NDA கூட்டணி, தனது வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயல்வதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


