News January 2, 2026

இந்தியாவில் புல்லட் ரயில்.. வந்தது அறிவிப்பு

image

நாட்டின் முதல் புல்லட் ரயில், 2027-ம் ஆண்டு ஆக.15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் முதல் பிலிமோரா வரையில் ரயில் சேவை தொடங்கும் என கூறியுள்ளார். 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.

Similar News

News January 22, 2026

5,500 பேரை காத்த ‘ஆம்புலன்ஸ் தாதா’

image

1998-ம் ஆண்டு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கரிமுல் ஹக், தனது தாயை இழந்தார். இனி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் யாரும் தவிக்கக்கூடாது என முடிவெடுத்தவர், தனது பைக்கை சிறு ஆம்புலன்ஸாக மாற்றினார். முதலுதவி கொடுக்கும் பயிற்சி பெற்றவர், அன்று முதல் 5,500 பேரை காப்பற்றியுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த இவரை மக்கள் ‘ஆம்புலன்ஸ் தாதா’ என அழைக்கின்றனர். அவருக்கு, 2017-ல் பத்மஸ்ரீ வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.

News January 22, 2026

உலகளவில் ‘விசில்’ டிரெண்டிங்

image

சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து SM-ல், #விசில் #Whistle #WhistleforTvk #தமிழக வெற்றிக் கழகம் ஹேஷ்டேகுகளை தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் டிரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக #Whistle நம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது. அண்மைக் காலமாக சுணக்கமாக இருந்த விர்ச்சுவல் வாரியர்ஸ், சின்னம் அறிவிப்பால் SM-ல் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.

News January 22, 2026

வெந்தய நீரை எப்படி அருந்துவது சிறந்தது?

image

செரிமான கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கு வெந்தயம் இயற்கையான தீர்வு அளிக்கிறது. ஆனால், அதனை ஊறவைத்து பருகுவதா அல்லது கொதிக்க வைத்து குடிப்பதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தினசரி உடல் ஆரோக்கியத்துக்கும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் ஊறவைத்த நீரே சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள். சளி, இருமல், நச்சுகளை போக்க கொதிக்க வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும். SHARE IT!

error: Content is protected !!