News November 19, 2025
இந்தியாவின் ‘Most Wanted கேங்ஸ்டர்’ பிடிபட்டார்!

இந்தியாவின் Most Wanted குற்றவாளியான அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று டெல்லி வந்தடைந்தார். பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் மீது, சித்து மூஸ் வாலா கொலை, சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. அன்மோலை கைது செய்த NIA குழு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
உணவு செரிமானமாக எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியுமா?

உணவு வயிற்றுக்கு சென்றால் போதும், அதுவாக செரித்துவிடும் என்று நினைப்போம். ஆனால், ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலில் ‘பயணம்’ செய்ய ஒரு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நமது உடலில் ஜீரண மண்டலமும் அப்படித்தான் இயங்கி வருகிறது. அதனால் தான் சரியான முறையில் உணவு உண்ண வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். எந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகின்றன என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி பாருங்க.
News November 21, 2025
நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News November 21, 2025
FLASH: பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 135 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் உலகின் மிகவும் நில அதிர்வுள்ள மண்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.


