News August 15, 2025
இந்தியாவின் விடுதலையில் கள்ளக்குறிச்சி!

விடுதலை வேண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுதந்திர கனல் பற்றி எரிந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில், உப்பு சத்தியாகிரகத்தின் போது கள்ளக்குறிச்சியில் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பலர் தேவனாம்பட்டினம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். அப்போது மதுவிலக்கு இயக்கம் கள்ளக்குறிச்சியில் பெரும் எழுச்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர்!
Similar News
News March 3, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிசில் முக்கிய விவாதம்!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக MLA மணிக்கண்ணன், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே போட்டியிட, நேற்று விருப்பமனு வழங்கியுள்ளார். மேலும், தனது தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை கூறி, வாக்கு கேட்டு மீண்டும் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்-ல் சொல்லுங்கள் மக்களே!
News March 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 2-ம் தேதி இரவு முதல் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


