News January 31, 2026

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்!

image

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 நவ. 26-ல் அன்றைய FM ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார். கோவையை சேர்ந்த இவர், நேருவின் அமைச்சரவையில் ஓராண்டு மட்டுமே நிதியமைச்சராக இருந்தார். இதில், ₹197.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் பாதுகாப்புக்காக ₹92.74 கோடியும், மொத்த வருவாய் ₹171.15 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவரே ‘இடைக்கால பட்ஜெட்’ என்ற சொல்லையும் உருவாக்கியவர்.

Similar News

News February 5, 2026

அரசியலில் இருந்து விலகலா.. அண்ணாமலை தெரிவித்தார்

image

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, அரசியலிலிருந்தே விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஒருபோதும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்துள்ளார். தேர்தல் பணி விலகலுக்கு தந்தையைக் கவனிக்க என காரணம் கூறினாலும், 6 தொகுதிகளுக்குள் அவரை அடக்கியதும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் தான் விலகலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

News February 5, 2026

காங்கிரஸுக்கு அதிரடி Offer-களை வழங்கினாரா விஜய்?

image

தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தாலும், திரை மறைவில் தவெக உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக உடன் கூட்டணி அமைக்க விஜய் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி இருப்பதாக பேசப்படுகிறது. கூட்டணிக்கு வந்தால் 70 தொகுதிகள், 1 DCM பதவி, 6 அமைச்சர்கள் பதவி, லோக்சபா தேர்தலில் 28 தொகுதியை தவெக தருவதாக உறுதியளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

News February 5, 2026

போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் செங்கோட்டையன்

image

சிட்டிங் MLA-வாக இருந்த கோபி தொகுதியிலேயே (ஈரோடு) போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்க உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தை தவெக தான ஆளப்போகிறது என்ற அவர், TN-ல் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் பெயர் ஒலித்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!