News May 25, 2024

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ₹2.49 லட்சம் கோடியாக உயரும்

image

2025-க்குள் இந்திய மருந்துகளின் ஏற்றுமதி மதிப்பு ₹2.49 லட்சம் கோடியாக உயரும் என்று PEPC கணித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்தியா தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. அதில், அமெரிக்காவுக்கு 40% ஜெனரிக் மருந்துகளும், WHO-க்கு (70%) தடுப்பூசிகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த விகிதம் வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

image

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், ​​அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

News March 4, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.

News March 4, 2026

அய்யா வைகுண்டர் வழியில் திமுக ஆட்சி: ஸ்டாலின்

image

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து, கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபம் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என்றவர். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் எனும் அய்யா வைகுண்டர் கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!