News June 3, 2024
இந்தியாவின் தங்கம் இங்கிலாந்து சென்றது ஏன்?

1990-91 காலகட்டத்தில், ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியின் போது, இந்தியா தன்னிடம் இருந்த 100.28 டன் தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து ,401 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. அந்த கடனை 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்தியா அடைத்து விட்டது. ஆனாலும், போக்குவரத்து மற்றும் வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக அங்கேயே வைக்கப்பட்டிருந்த தங்கம், தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
உலகின் தலையெழுத்து மாறிய தினம் இன்று!

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?
News December 1, 2025
நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் CPR: PM மோடி

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.
News December 1, 2025
ஒரு மாசத்துக்கு இலவச பீர்.. ஆனா ஒரு கண்டிஷன்

USA-ல் தற்போது சட்டவிரோத குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காட்டினால் ஒரு மாதத்துக்கு இலவச பீர் வழங்குவதாக அங்குள்ள, ‘ஓல்டு ஸ்டேட் சலுான்’ மதுபான கடை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சர்ச்சையை கிளப்புவதில் இக்கடை செம்ம பேமஸ். முன்னதாக, Pride மாதத்தின் போது LGBTQ-வினருக்கு எதிராக இக்கடை விளம்பரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


