News October 31, 2025

இந்தியாவின் இரும்பு மங்கை மறைந்த தினம் இன்று

image

இரும்பு மங்கை, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை படைத்த இந்திரா காந்தி 1984ம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 முறை பிரதமர், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர், எமர்ஜென்சியை அமல்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கினார். இந்திராவை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளன. என்றாலும், எமர்ஜென்சி இன்றும் அவரது அரசியல் அத்தியாயத்தின் கரும்புள்ளியாகவே உள்ளது.

Similar News

News November 1, 2025

சாதி அவமானகரமானது: மாரி செல்வராஜ்

image

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 1, 2025

நவம்பர் 1: வரலாற்றில் இன்று

image

*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
*1956 – கேரளா, ஆந்திரா, மைசூர் (கர்நாடகா) மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
*1956 -கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மெட்ராஸ் (தமிழ்நாடு) உடன் இணைந்தது.
*1959 – தியாகராஜ பாகவதர் நினைவுநாள்.
*1973 – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.
*1974 – VVS லக்‌ஷ்மன் பிறந்தநாள்.

News November 1, 2025

SIR என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

image

‘SIR’ என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடுகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அந்த SIR-ஐ இதுவரை CM ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை என்றும் சாடினார். 2016 – RK நகர் இடைத்தேர்தலின்போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர் என்று சுட்டிக்காட்டிய நயினார், இன்று SIR-ஐ அவர்களே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!