News February 26, 2026
இந்தியரிடம் ₹35,000 கடன் பெற்ற பிரிட்டிஷ் அரசு

இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்ட பிரிட்டிஷ் அரசு, முதல் உலகப் போர் செலவுகளை சமாளிக்க மக்களிடம் கடன் வாங்கியது. இந்நிலையில் MP-ஐ சேர்ந்த விவேக் ருதியா, அலமாரியில் இருந்த சொத்து ஆவணங்களை சரிபார்த்த போது, தனது தாத்தா பிரிட்டன் அரசுக்கு ₹35,000 கடன் வழங்கிய ஆதாரம் கிடைத்தது. கடனின் மதிப்பு தற்போது கோடிகளில் இருக்கும் என நிபுணர்கள் கூறுவதால் வட்டியும், முதலுமாக பணத்தை திரும்பப்பெற அவர் முயற்சிக்கிறார்.
Similar News
News March 2, 2026
இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே சென்றது?

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.
News March 2, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹920 குறைந்தது

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 2, 2026
திமுகவின் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ?

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


