News June 5, 2024
இதுவே முதல் முறை: கொண்டாட்டத்தில் ஓசூர் மக்கள்

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி எம்பியாக இதுவரை ஓசூரை சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்பட்டதில்லை. இதுவரை வெளியூர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், கிருஷ்ணகிரி எம்.பி.யாக வெற்றிபெற்றிருந்தனர். இந்நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி பெற்றதன் மூலம் ஓசூரைச் சேர்ந்த ஒருவர், கிருஷ்ணகிரி எம்பி ஆவது இதுவே முதல் முறை என்பதால் ஓசூர் மக்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News April 5, 2026
கிருஷ்ணகிரி: 8 வயது மகனுடன் தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே சந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (31) என்பவர், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில், நேற்று தனது 8 வயது மகனுடன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
News April 5, 2026
கிருஷ்ணகிரி: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
News April 5, 2026
கிருஷ்ணகிரி: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


