News April 4, 2025

இதுவரை 55 பேருக்கு பாதிப்பு

image

திருவல்லிக்கேணி பகுதியில், பிரபலமான ‘ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு (மார்.30) முந்தைய நாள் இங்கு பீப், ஷவர்மா, பிரியாணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 55 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 9, 2025

19 மின்சார ரயில்கள் ரத்து

image

சென்னை – கும்மிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 9) மற்றும் 11 ஆகிய தேதிகளில் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுங்கள். செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – தாம்பரம் பகுதி நேரமாக ரத்து செய்ப்பட்டுள்ளது.

News August 9, 2025

துரோகத்தால் நாறும் சென்னை!

image

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. திமுக சொன்னதை செய்யாமல், துரோகம் செய்ததன் விளைவுதான் தூய்மை பணியாளர்கள் வேலை இழந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். முதல்வருக்கு உண்மையாகவே பட்டியலினத்தவர் மீதும், தூய்மை பணியாளர் மீதும் அக்கறை இருந்தால் பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

சென்னையில் விஜய் கட்சிக்கு சென்றதால் வெட்டு!

image

கிண்டியைச் சேர்ந்த ஸ்ரீராம், TVK கட்சியின் 168ஆவது வார்டு பொருளாளர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகிரெட்டி தோட்டம் பிள்ளையார் கோயில் அருகே வைக்கப்பட்ட TVK பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதுகுறித்து சந்தோஷ் என்பவரிடம் ஸ்ரீராம் விசாரித்ததால், நேற்று (ஆகஸ்ட் 9) சந்தோஷ் நண்பர்களுடன் ஸ்ரீராமை பிளேடால் முகத்தில் கிழித்துள்ளார். திமுகவில் இருந்து TVK-விற்கு மாறியதால் வெட்டியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!