News November 30, 2024
இதுதான் புயல் பாதிப்பை தடுக்கும் முறையா?

மழை-புயல்-வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு பொதுவாக 4 வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று, மழைநீர் வடிகால்களை அமைப்பது. இரண்டாவது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது. மூன்றாவது, பெருமழையால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பது & மீட்புப்பணி. நான்காவது, தங்குமிடம், உணவு , பணம் உள்ளிட்ட உடனடி நிவாரணங்கள். ஆண்டுதோறும் இந்த காட்சி மாறுவதில்லை. இது நிரந்தர தீர்வாகுமா? அரசு என்ன செய்ய வேண்டும்?
Similar News
News April 26, 2025
கோடீஸ்வர யோகம்: பணம் கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் மே 31 முதல் ஜூன் 29 வரை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *சிம்மம்- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கோடீஸ்வர யோகம், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி *துலாம்: அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு, தொழில் முயற்சி கைகூடும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் *மேஷம்: பண யோகம் வரும், கோடீஸ்வர அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
News April 26, 2025
ஆனந்த் அம்பானிக்கு புதிய பொறுப்பு

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலோடு, அவர் முழுநேர இயக்குநராக பணிபுரிவார் என்று ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இவர் 2023-ஆம் ஆண்டு Non-Executive இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனந்த் அம்பானி அமெரிக்காவின் பிரவுன்ஸ் பல்கலையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 26, 2025
CSK தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்: ப்ளெமிங்

CSK அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், 7 தோல்விகளை தழுவி CSK அணி கடைசி இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசியிருக்கும் ப்ளெமிங், ஏலத்தில் திறமையான வீரர்களை அடையாளம் காணாமல் விட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.