News July 26, 2024
இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பணம் சிக்கியது. பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புக்கு தகவல் வந்தது. தொடர்ந்து 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் நேற்று இரவு திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து, சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 3, 2026
விழுப்புரம்: புதிய யுக்தியை கையில் எடுத்த தவெக-வினர்!

திண்டிவனத்தில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் மண்டல இணை கண்காணிப்பாளர் அன்பரசன் கலந்து கொண்டு, ”ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, களத்தில் இறங்கி செயல்பட்டு அதனை தீர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிர்வாகியும் முறையாக செய்தால் விஜய்யை முதலமைச்சராக்க முடியும்” என கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்!
News March 3, 2026
விழுப்புரத்தில் கார் மோதி பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (73); இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி-மடப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார், கேசவன் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கேசவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சார்பில் நேற்று ( மார்ச் 02) இரவு 10 மணி முதல் (மார்ச் 03) காலை 6:00 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி,கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.


