News December 26, 2025
இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சென்னையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் மண்டபங்களில் அடைந்து வைத்துள்ளனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்காக தமிழக அரசு அழைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த போராட்டத்துக்கு ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 30, 2025
சின்ன காய் தான்… ஆனால் நன்மைகள் பெரிது!

வீட்டு தோட்டங்களில் எளிதாக கிடைக்கும் ஒரு காய் சுண்டைக்காய். சிறிதாக இருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகப்பெரிது என்கின்றனர் டாக்டர்கள். வாரம் 2 முறை இதை சாப்பிட்டால், *ரத்தம் சுத்தமடையும் *வயிற்றுக் கிருமிகள் அழியும் *வயிற்றுப் புண்களை ஆற்றும் *மலச்சிக்கலை நீக்கும், அஜீரண கோளாறுகள் குணமாகும் *சுவாச நோய்களுக்கு நல்லது *சர்க்கரை நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், உடல் சோர்வு குறையும்.
News December 30, 2025
தேதி குறிச்சாச்சு.. ரஷ்மிகாவுக்கு டும் டும் டும்!

நடிகை ரஷ்மிகா மந்தனா- நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏதும் வெளிவராத சூழலில், தற்போது அவர்களின் திருமணத் தேதி குறித்த தகவல் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2026 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இருவரும் ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News December 30, 2025
விஜய்யிடம் சிபிஐ விசாரணையா?

கரூர் விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லி CBI அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து விஜய் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு குறிப்பிட்ட நிர்வாகிகளுக்கு விடுத்த அழைப்பின் பேரில் விசாரணைக்கு ஆஜரானோம் என்று நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.


