News July 12, 2024
இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்த்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (ஜூலை 12) ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி செல்லா மாணவர்களை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கினார்.
Similar News
News July 7, 2025
திருப்பத்தூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

திருப்பத்தூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்
News July 7, 2025
காவல்துறையின் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர், கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் முகநூல் வாசிகளுக்கு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது. அதன்படி, Cyber Scam: உங்கள் நண்பரின் முகநூல் பக்கத்திலிருந்து அவசர தேவை எனக்கூறி பணம் கேட்டு செய்தி வந்தால் நம்ப வேண்டாம். அவ்வாறு தங்களுக்கு ஏதேனும் செய்தி வந்தால் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையை தொடர்புகொள்ள தெரிவித்துள்ளது.
News July 7, 2025
திருப்பத்தூர் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். திருப்பத்தூரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!