News June 19, 2024
இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பாமக வேட்பாளர் சி.அன்புமணி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதிமுக, தவெக போட்டியிடவில்லை என அறிவித்ததால், மும்முனை போட்டியாக இருப்பதோடு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News July 7, 2025
தடை நீக்கும் பரிக்கல் நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதுவாக உக்கிர ரூபத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர், இங்கு சாந்தமாக அருள்பாலிக்கிறார். லட்சுமி தேவி மடியில் இல்லாமல், நரசிம்மர் தனியாக சாந்தமாக காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
விழுப்புரம் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
News July 7, 2025
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு 10ஆம் தேதி பேச்சுப்போட்டி

தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி வரும் 10 ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.