News October 23, 2025
இசையமைப்பாளர் சபேஷ் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்

இசையமைப்பாளரும், பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்தவருமான சபேஷ் சென்னை வடபழனியில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இம்சை அரசன், 23ம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து சமுத்திரம் போன்ற படங்களின் இசை அமைத்துள்ளார்.
Similar News
News October 23, 2025
சென்னை: கடற்கரையில் பரவும் வெண் நுரைகள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும், ஆகாய தாமரையும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகின்றன. இதனால் மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடற்கரையோரம் படர்ந்துள்ளது.
News October 23, 2025
சென்னை: கனமழை களப்பணியில் 22 ஆயிரம் பேர்

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு(1913) மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு, பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
News October 23, 2025
தண்ணீரில் மூழ்கி 2 வயது சிறுமி பலி!

சென்னை: மாங்காடு ஜனனி நகரைச் சேர்ந்த பிரினிகா ஸ்ரீ(2) வீட்டின் அருகே இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போன நிலையில், இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.