News June 15, 2024
இசைப் பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.400 மற்றும் இலவச பயண அட்டை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே மாணவர்கள் இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
கடலூர்: ரயில் மோதி துடிதுடித்து பலி

விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய விருத்தாசலம் போலீசால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News November 10, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


